அ.தி.மு.க. கூட்டணியில்தான் தே.மு.தி.க. தொடர்கிறது- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

தே.மு.தி.க இன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
Published on

நாகப்பட்டினம்:

நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க இணைப்பு குறித்து பார்ப்போம் என்று அ.தி.மு.க அமைச்சர்கள் கூறிவந்தனர். தற்போது சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்து விட்டதால் என்ன நடக்குமோ என்று எல்லோரும் எதிர்பார்த்து வருகின்றனர். அ.தி.மு.க அரசு கடந்த 4 ஆண்டு காலமாக தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. 

இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றவர் டி.டி.வி. தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களை தன்னோடு அழைத்துச்சென்று அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் டிடிவி தினகரன். தற்போது அவர் அ.தி.மு.க இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக உள்ளது. சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அ.தி.மு.க.வினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். 

தே.மு.தி.க இன்னும் அ.தி.மு.க கூட்டணியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com