

மதுரை விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும்.
தே.மு.தி.க. சார்பில் எந்தெந்த தொகுதியில் யார், யார் போட்டியிடுவார்கள்? என்பது குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் அறிவிப்பே இறுதியானதாகும்.