ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #JammuMunicipalBoard #BJP #Modi
ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.

நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஜம்மு நகராட்சியில் மொத்தமுள்ள 75 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், ஜம்மு காஷ்மீரில் 178 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். இதேபோல், பாஜக தலைவர் அமித் ஷாவும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #JammuMunicipalBoard #BJP #Modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com