டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்ற அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi
டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்ற அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி:

இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை குதித்து நீளம் தாண்டுதல்) இந்தியாவின் அர்பிந்தர் சிங், ராகேஷ் பாபு ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அர்பிந்தர் சிங் 16.77 மீட்டர் நீளம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டில் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அர்பிந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், இந்தோனேசியாவின் ஆசிய விளையாட்டு போட்டியில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் சமயோசிதம் மற்றும் கடும் உழைப்பால் அர்பிந்தர் சிங் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவரது வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #ArpinderSingh #PMModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com