பணம் மோசடி- டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு ஜெயில்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் மார்ட்டின் (வயது 52). இவர் தனது நண்பரான கருங்கல் வழுதலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (71) என்பவருடன் சேர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு தக்கலை பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். தக்கலை பகுதியை சேர்ந்த நிஷா என்பவர் இங்கு ஊழியராக வேலை பார்த்தார்.

இந்த நிலையில் கடந்த 2001-ம் ஆண்டு குமரி மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார், அமிர்தாஸ், தேவராஜ் உள்பட 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி டிராவல்ஸ் உரிமையாளர்கள் ரூ.4 லட்சத்து 58 ஆயிரம் மோசடி செய்தனர். இதுதொடர்பாக 7 பேரும் தனித்தனியாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், ராஜேந்திரன் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, அவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்தை கொடுத்து அதற்கான 9 சதவீத வட்டியும் 2 மாத காலத்துக்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com