பட்டாசு ஆலைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

பட்டாசு ஆலைகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகின்றது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிவகாசி:

சிவகாசியில் சபையர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 25-ம் ஆண்டு விழா பள்ளியின் தளாளர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட கலெக்டர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

சமூக அக்கறையோடு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டாசு ஆலைகளில் தற்போது வேலையின்றி உள்ளதால் கல்வி கட்டணத்தில் இந்த பள்ளி சிறப்பு சலுகை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

பட்டாசு ஆலைகளை விரைவில் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வி செல்வம்தான் அழியா செல்வம். கல்வியில் சிறந்த நாட்டில் பொருளாதாரம் உயரும்.

விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வில் 17 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. ஜெயலலிதா வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் அழகேஸ்வரிஞானசேகரன், ஏர்போர்ட் அத்தார்டி உறுப்பினர் கதிரவன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா, கவிஞர் காளியப்பன், பள்ளி முதல்வர் பிரபு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, எதிர்கோட்டை மணி கண்டன், ராமராஜ், திருத் தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், கூட்டு றவு சங்க தலைவர் ஆரோக் கியம், விஸ்வநத்தம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com