

மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று தொண்டர்களிடையே பேசினார்.
அப்போது பேசிய அவர், லடாக் ஜம்மு இடையே எவ்வித வளர்ச்சியும் இல்லாததால் தான் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தலைவர் அமித் ஷா வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2014-ம் ஆண்டு ஜம்மு லடாக் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டுமே அங்கு வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், அப்பகுதிகளில் எவ்வித வளர்ச்சியுமே இல்லை என கூறமுடியாது எனவும் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.