தினகரனின் பரிசுப்பெட்டி காலி பெருங்காய டப்பா- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பாராளுமன்ற தேர்தலில் தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பரிசு பெட்டி சின்னமானது காலி பெருங்காய டப்பா என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை:

தேனி பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் உசிலம்பட்டி பகுதிகளில் இன்று கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டி பிரசாரம் செய்தார்.

அவருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நீதிபதி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்றனர். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு மக்களுக்கு செய்துள்ள சாதனைகளை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறது. ஆனால் தி.மு.க.வினர் தனி நபர் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்கள். இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஜெயலலிதா மீது வழக்குகளை போட்டு தொல்லை கொடுத்த தி.மு.க.வினர் இப்போது ஜெயலலிதா மீது பரிதாபம் காட்டுகிறார்கள்.

மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் நடத்த பார்க்கிறார். அ.தி.மு.க.வை அழிக்கப்போவதாக கூறிய டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தலோடு காணாமல் போய் விடுவார். அவருக்கு “பரிசு பெட்டி” சின்னம் கிடைத்துள்ளது. அந்த பரிசு பெட்டி காலி பெருங்காய டப்பா. அது தோற்கிற சின்னம். இரட்டை இலை சின்னம் தான் வெற்றி மகுடம் சூடும் சின்னமாகும்.

எனவே தேனி பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. பெறும் வெற்றி டெல்லியில் எதிரொலிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #ADMK #RBUdhayakumar

X

Maalai Malar
www.maalaimalar.com