வேலூரில் நடந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை- கே.சி. வீரமணி பேட்டி

வேலூரில் நடந்த முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
அமைச்சர் கே.சி.வீரமணி
அமைச்சர் கே.சி.வீரமணி
Published on

குடியாத்தம்:

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக ரூ.4 கோடியே 79 லட்சத்தில் 26 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் த.வேலழகன், பொதுப் பணித்துறை வேலூர் கோட்ட கட்டிடங்கள் பிரிவு செயற் பொறியாளர் சங்கரலிங்கம், உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி. வீரமணி நிருபர்களிடம் கூறிய தாவது:-

2 நாட்களுக்கு முன்பு வேலூரில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனையும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும் அழைக்கவில்லை, என அவர் கூறினார்.

இது, முதல்-அமைச்சரின் அலுவல் ஆய்வுகூட்டம். வேலூரில் நடந்த முதல்- அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களுக்கும் அழைப்பு இல்லை. இதற்காக, அழைப்பிதழும் அடித்து அழைக்கப்படவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் நானாகவும், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். இது முழுக்க தமிழக முதல்-அமைச்சரின் அதிகாரத்துக்கு உட்பட்ட அலுவல் ஆலோசனைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதை வைத்து தி.மு.க.வினர் அரசியல் பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com