

சென்னை:
காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து காலை 10.30 மணிக்கு வெளியில் வந்த கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
கருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு தற்போது சீராகி விட்டது. நேற்று இரவு ரத்த அழுத்தம் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இன்று அது இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
தற்போது கருணாநிதி நலமாக உள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார். #DMK #Karunanidhi #Kanimozhi