

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, இந்தியர்களின் கணக்கு விவரங்களை, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் சுவிட்சர்லாந்து ஒப்படைக்கிறது. இது முதல் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் அடுத்தடுத்து ஒப்படைக்கப்படும்.