search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    115-வது பிறந்தநாள்: அண்ணா சிலைக்கு 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மரியாதை
    X

    115-வது பிறந்தநாள்: அண்ணா சிலைக்கு 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மரியாதை

    • அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
    • கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளான வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×