தமிழகத்தில் 63¼ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை- மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

தமிழகத்தில் 63 லட்சத்து 28 ஆயிரத்து 328 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளாமல் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி
Published on

சென்னை:

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 64 லட்சத்து 2 ஆயிரம் ஆகும். இதில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 6 கோடியே 12 லட்சத்து 37 ஆயிரம் பேர்.

தமிழகத்தில் இதுவரை 93 லட்சத்து 20 ஆயிரத்து 839 பேர் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இதில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 77 லட்சத்து 2 ஆயிரத்து 267 பேரும், கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தாதவர்கள் 16 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேரும் அடங்குவர்.

மேலும் 63 லட்சத்து 28 ஆயிரத்து 328 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com