சாமிதோப்பு அய்யா வைகுண்ட பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம்

பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம்
Published on

நாகர்கோவில்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலா ளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் நாராயணன் குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மேல காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் இன்று குமரி மாவட்டம் வந்தார்.

சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து சொந்த ஊரான மேலக்காட்டு விளைக்கு வந்தார். இன்று மாலை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

மாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com