search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் 16-ந்தேதி இப்தார் விருந்து: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    அ.தி.மு.க. சார்பில் 16-ந்தேதி இப்தார் விருந்து: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புரட்சி தலைவி அம்மாவின் வழியில் இந்த ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் தோழமை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×