

சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தில் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வம் நேற்று முந்தினம் மாலை படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடியில் அதிமுக நிர்வாகி ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகியோரை செல்வம் கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் - மம்தா பானர்ஜி