

வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், ஊழியர்கள், சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் என்று 1,500 பேரின் சளி மாதிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகரிக்கப்பட்டது. அதன் முடிவு அனைத்தும் வந்துவிட்டது. அதில் 115 வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏராளமான வியாபாரிகள், ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் காணப்பட்டது. ஆனால் குறைந்த நபர்களே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இ-பாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தற்போதைய நடைமுறையே தொடரும்.