மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் - பிரதமர் அறிவிப்பு

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரிசோதனை
Published on

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.135 கோடி) மதிப்பில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே வினியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என குறிப்பிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com