

மேகதாது அணை விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படாததால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. அன்வர் ராஜா உள்பட 24 எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.
அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து அன்வர் ராஜா எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பேச அனுமதி மறுப்பது ஜனநாயகத்துக்கு, அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானதாகும். சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குவது போல் உள்ளது.
தமிழகத்தின் உரிமையை காக்க நாங்கள் பின்வாங்க மாட்டோம்.