அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் பேச வேண்டும்- அதிமுக எம்எல்ஏ

அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ செம்மலை
அதிமுக எம்எல்ஏ செம்மலை
Published on

சென்னை:

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கூறியதாவது:-

பழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் ஏற்கனவே தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com