ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமானவர் தினகரன் - அமைச்சர்கள் பேச்சு

ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமாக இருந்த தினகரனின் திருட்டுத்தனம் திருப்பரங்குன்றத்தில் எடுபடாது என்று அமைச்சர்கள் பேசினர். #ADMK #TNMinisters #TTVDhinkaran #Thirupparankundram
ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமானவர் தினகரன் - அமைச்சர்கள் பேச்சு
Published on

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் 5 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கும் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.

அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தலைமையில் புறப்பட்ட சைக்கிள் பேரணியை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரை தனக்கன்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வில் அவ்வப்போது சில சேதாரங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் அ.தி.மு.க. சேதம் அடையவில்லை. தினகரன், ரஜினி, மு.க.ஸ்டலின், கமல் போன்றவர்கள் முதல்வர் நாற்காலிக்காக கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

இவர்களால் அ.தி.மு.க. சிறிதளவுகூட மக்கள் செல்வாக்கை இழக்காது. திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த 1977-ல் இருந்து அ.தி.மு.க. வெற்றி பெற்று வருகிறது. தொடர்ந்து மக்கள் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த வெற்றிக்கு பிறகு தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் இருக்கமுடியாது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் முளைத்துள்ள சிறுசிறு கட்சிகளும் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. இதுவரை வெற்றி சரித்திரமே படைத்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா இன்னும் நூறு ஆண்டுகள் தமிழக மக்களுக்கு இந்த கட்சி மக்கள் பணியாற்றும் என்ற லட்சியத்தை கூறியிருக்கிறார். அதே நிறைவேற்றுகின்ற வகையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வெற்றி அமையும். அதற்கு இங்கு திரண்டுள்ள இளைஞர் பட்டாளமே சாட்சியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.முக. வெற்றி உறுதியாகிவிட்டது. எதிர்த்து நிற்கும் அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழப்பார்கள் என்பதற்கு இங்கே திரண்டுள்ள கூட்டமே சாட்சியாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது அவரை ஆதரித்தது மதுரை மாவட்ட மக்கள் தான். எம்.ஜி.ஆர். தந்த தொகுதி திருப்பரங்குன்றம்.

தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்ற அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தார் தினகரன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல காரணமாக இருந்தவர் தான் தினகரன்.

அ.தி.மு.க.வில் உற்சாகமான தொண்டர்கள் உள்ளனர். எனவே இந்த இயக்கத்திற்கு ஒருபோதும் வீழ்ச்சி இல்லை என்றார்.

அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பேசியதாவது:-

அம்மா பேரவை தமிழகம் முழுவதும் அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் இளைஞர் பட்டாளம் சைக்கிள்களில் சென்று மக்களை சந்தித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் புறப்பட்டுள்ள இளைஞர் பட்டாளம் வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். இந்த வெற்றியின் மூலம் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்ற வரலாற்றை ஏற்படுத்துவோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com