ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் 7½ பவுன் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் 7½ பவுன் நகையை திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் 7½ பவுன் நகை திருட்டு
Published on

கோவை:

திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி ராஜாமணி (வயது 62). சம்பவத்தன்று இவர் பஸ்சில் கோவை வந்தார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், ராஜாமணி அணிந்திருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர். அவர் மத்திய பஸ் நிலையத்தில் இறங்கியபோது நகை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

கணபதி சங்கனூரை சேர்ந்த கருப்புசாமி என்பவருடைய மனைவி துளசி (75). சம்பவத்தன்று இவர் பஸ்சில் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் நகையை திருடியது தெரிய வந்தது. 2 சம்பவங்கள் குறித்தும் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டு ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com