ஜொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் டன்சோ போன்ற நிறுவனங்கள் நாட்டில் டிரோன் விமானங்களை கொண்டு பொருட்களை டெலிவரி செய்வதற்கான சோதனையை துவங்க மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'டிரோன் மூலம் டெல்வரி செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் புதிய முடிவை வரவேற்கிறோம். வான்வெளியில் உணவு டெலிவரி செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்,' என ஜொமாட்டோ நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார்.