மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பெல்ஜியத்தின் ஜிஜோ பெர்க்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதியில் ஸ்வரேவ், பிரேசிலின் ஜொ பொன்சேகாவை சந்திக்கிறார்.