ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி,
ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மேன்ஸ்-மொனாகோவின் ரோமைன் அர்னேடோ ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட எதிர் தரப்பு 2வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் 2வது செட்டை 7-6 (7-2) என எதிர் தரப்பு வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் டை பிரேக்கரில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-10 என தோல்வி அடைந்தது.