டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் ரிபாகினா

கனடா ஓபன் டென்னிஸ் தொடர் டொரண்டோ நகரில் நடந்து வருகிறது. கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.

மாலை மலர்

டொரன்டோ:

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையரில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரீம்ஸ்கா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 5-7 என இழந்த ரிபாகினா அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.