ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் ரூப்லெவ், செக் குடியரசின் தாமஸ் மசாக் உடன் மோத உள்ளார்.