ஜாக்ரெப்:
குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுகள் நேற்று நடந்தன.
இதில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, செக் வீரர் ஜாகுப் மென்சிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியின் முடிவில் முசெட்டி 6-4, 6-1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் முசெட்டி, அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோவை சந்திக்கிறார்.