டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் மரியா சக்காரி

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

மாலை மலர்

தோஹா:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி உடன் மோதினார்.

சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-2 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மரியா சக்காரி அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.