டென்னிஸ்

செங்டு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் இத்தாலி வீரர்

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. காலிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்றார்.

மாலை மலர்

பீஜிங்:

செங்டு ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜார்ஜியாவின் நிகோலஸ் பசிலாஷ்விலி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லாரன்சோ முசெட்டி 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.