ரோம்:
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையரில் நேற்று இரவு நடந்த அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான சீனாவின் கின் வென் ஜாங், அமெரிக்காவின் கோகோ காப்பை எதிர்கொண்டார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி வென்றார். இரண்டாவது செட்டை கின் வென் ஜாங் 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை கோகோ காப் 7-6 (7-4) என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இந்தப் போட்டி சுமார் 3 மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தது.
நாளை நடைபெறும் இறுதிபோட்டியில் கோகோ காப், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்கொள்கிறார்.