பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.