கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிகளை வீழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று மோதுகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதால் இதில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.