பிரான்சில் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னேசன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டென்மார்க் வீரர் மேக்னஸ் 21-12, 21-10 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவின் முன்னணி வீரர் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார்.