துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக், சிராக் ஜோடி, இந்தோனேசிய ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-11, 21-12 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.