கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் லீ ஜே ஹூய்-பி.ஹெச்.யாங் உடன் மோதியது.
ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-13, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.