ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.
இந்தியா சார்பில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பிவி சிந்து, உன்னதி ஹூடா, சிராக் ஷெட்டி-சாத்விக் ரங்கிரெட்டி ஜோடி, தனிஷாகிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றைஒயர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே கலப்பு இரட்டையரில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ - துருவ் கபிலா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.