விளையாட்டு

புரோ கபடி லீக்: புனே, பெங்கால் அணிகள் இடையிலான ஆட்டம் சமன்

புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.பெங்கால் வாரியர்ஸ் அணி இன்றைய போட்டியை சமன் செய்தது.

மாலை மலர்

ஐதராபாத்:

11-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், நடப்பு சாம்பியன் புனேரி பால்டன் அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பாக ஆடின. ஒரு கட்டத்தில் புனேரி பால்டன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

இறுதியில், பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் இடையிலான போட்டி 32-32 என சமனில் சமனில் முடிந்தது.

நடப்பு தொடரில் சமனில் முடிந்துள்ளது 3வது போட்டி இதுவாகும்.

புனேரி பால்டன் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என மொத்தம் 19 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.