சென்னை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ் இடையிலான ஆட்டம் 29-29 என சமனில் முடிந்தது. தொடர்ந்து
நடந்த டை பிரேக்கரில் புனேரி பல்தான் 6-4 என வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. தபாங் டெல்லி 2-வது இடத்திலும், தெலுகு டைட்டன்ஸ் 3-வது இடத்திலும் உள்ளது.