விளையாட்டு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி- 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம்.

மாலை மலர்

பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்திய அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.

இதற்காக, பஹாமாஸில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி தகுதி பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான மகளிர் அணியில் தமிழகத்தை சேர்ந்த சுபா வெங்கடேசனும் இடம் பெற்றுள்ளார்.