விளையாட்டு

பாரா ஒலிம்பிக் போட்டி: ஷீத்தல் தேவி- ராகேஷ் குமார் வெண்கலம்

இந்தியா இதுவரை 14 பதக்கங்களை வென்றுள்ளது.இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

மாலை மலர்

பிரான்ஸ்:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலப்பு அணி வில்வித்தையில் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளது.