கோபன்ஹேகன்:
டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் அலெக்ஸ் லானியர்
உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்ஸ் லானியர் 21-9, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவின் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.