மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஜகி உபயதுல்லா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீரர் 21-17, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றுடன் வெளியேறினார்.
மற்றொரு போட்டியில் ஜப்பானின் கோடை நரோகா 21-17, 20-22, 24-22 என்ற செட் கணக்கில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.