டோக்கியோ:
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் வாங் ஜெங் ஸின்னுடன் மோதினார்.
ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லக்ஷயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.