விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேற்றம்

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானில் நடந்து வருகிறது.

தைபே ஓபன் பேட்மிண்டன் தொடர் தைவானின் தைபேயில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், சக நாட்டு வீரரான தருண் மன்னேபள்ளி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கிரண் ஜார்ஜ் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் 9-21, 19-21 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஜேசன் குணவானிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.