விளையாட்டு

தடகள வீரர்களைப் பற்றி அதிக கட்டுரைகள்: உசேன் போல்டை பின்னுக்குத் தள்ளிய நீரஜ் சோப்ரா

தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர்.இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

மாலை மலர்

தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். அதன்பின் தடகளத்தில் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ராதான்.

உலகளாவிய தடகள வீரர்கள் வீராங்கனைகள் குறித்த கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022-ல் அதிக கட்டுரைகள் எழுதப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் உசைன் போல்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார். தற்போது நீர்ஜ் சோப்ரா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

2017-ல் ஓய்வு பெற்ற உசைன் போல்ட் குறித்து 574 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

ஜமைக்கானவின் தடகள வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா குறித்து 751 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.