வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் இஷாராணி பரூவா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இஷாராணி பரூவா 21-10, 21-18 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.