உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் டெல்லி இந்திரா காந்தி உள்ளரங்கில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இதில் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சீனாவின் ஜியா யீபான் - ஜாங் சுக்சியான் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய சீன ஜோடி 21-16 என முதல் செட்டைக் கைப்பற்றியது. இதில் சுதாரித்துக் கொண்ட திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.
ஆண்கள் ஒற்றையர், பெண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.