விளையாட்டு

சொந்த மண்ணில் ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா - மீண்டும் டி20 தரவரிசையில் முதலிடம்!

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்குப் பின் மீண்டும் வெற்றி.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அவ்வணியை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி.

ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது மற்றும் இறுதி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான 81 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் ஜிம்பாப்வே தோல்வி அடைந்திருந்த நிலையில் தொரடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.

இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்குப் பின், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இந்த ஒயிட்வாஷ் வெற்றியின் மூலம் மீண்டும் டி20 தரவரிசையில் தனது முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT