தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் ஹார்சன்ஸ் நகரில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா பிரான்சை எதிர்கொண்டது.
இந்திய நட்சத்திர வீரர்களான எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி, கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் ஒற்றையர் பிரிவில் தோல்வி அடைந்தனர்.
இதையடுத்து, பிரான்ஸ் அணி இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும் வெண்கல பதக்கம் என்று ஆறுதல் அடைந்தது.